தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம்

Spread the love

தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்
அடுத்த அலமாதியில் அமைந்துள்ள அன்பு இல்லம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தின் வடசென்னை மாவட்ட சங்கம் சார்பாக வடசென்னை மாவட்ட சங்க தலைவர் ஆர்.முத்துராஜா, கௌரவ தலைவர் ஆர்.வி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் எம்.வி.வைரகுமார், செயலாளர் ஆர்.தரணி, இணைச் செயலாளர் அன்பழகன், துணைச் செயலாளர் ஏ.சுதாகர், பொருளாளர் கே.சத்தியமூர்த்தி, திருவெற்றியூர் தொகுதி கௌரவத் தலைவர் டி.தக்ஷிணாமூர்த்தி, இணைச்செயலாளர் சில்வர்ஸ்டார், மாதவரம் தொகுதி தலைவர் எம்.ஏ.ராமலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் குமார், மேற்பார்வையாளர் டி.வீரதுரை,செயலார் ஜி.சந்தோஷ்,
கொளத்தூர் தொகுதி தலைவர் வி.ரமேஷ்,
ராயபுரம் தொகுதி தலைவர் வெற்றிவேல்,
செயலாளர் எஸ்.பி.சதீஷ்குமார், அன்பு இல்லம் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். இதில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial