சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து சார்பில் மகளிர் இருசக்கர வாகனம் பேரணி

Spread the love

சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த மகளிர் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது இந்த பேரணிக்கு சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கேபி ஜெயக்குமார் தலைமை தாங்கினார் இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ் ரமேஷ் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே பி ஜெயக்குமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் இந்தப் பேரணி சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி மாதவரம் மேம்பாலம் வழியாக சென்று மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது இதில் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial