திருநிலை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளிய
மண் பானைகளில் பொங்கல் வைத்து படையலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதையடுத்து ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், மோட்டார் பம்பு ஆபரேட்டர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் துணைத்தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர்கள் ஆஷா பிரதாப், ரேவதி ஜான்சன், பிரகதி வின்னரசு, பூபதி, கவிதா வெங்கடேசன் மற்றும் ஊராட்சி செயலர் பி.சௌமியா
மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial