கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள், பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Spread the love

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள், பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி 1, 6 மற்றும் 7வது வார்டுக்குட்பட்ட 250 முதியோர்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பிரியாணியும் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் இ.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

தொழிலதிபர் ஜி.எஸ். பாண்டியன், புழல் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெ.முருகன், கோமதியம்மன் நகர் டேங்கர் பாபு, பாலவாயில் சதீஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், பிரியாணியும் வழங்கி துவக்கி வைத்தனர்.

உடன் வார்டு உறுப்பினர்கள் தரணீதரன், கீதா விஜி, சாந்தி மூர்த்தி, வேளாங்கண்ணி சரவணன், 6வது வார்டு எழில், சுரேஷ், குரு, கௌதமன், தலித் ராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial