மறைந்த தேசிய பாசறை இதழின் ஆசிரியரும் TJU சங்கத்தின் மாநில தலைவருமான காளிதாஸ் அவர்களின் திருஉருவப் பட திறப்பு

Spread the love

மறைந்த தேசிய பாசறை இதழின் ஆசிரியரும் TJU சங்கத்தின் மாநில தலைவருமான காளிதாஸ் அவர்களின் திருஉருவப் பட திறப்பு மற்றும் அவருக்கு பத்திரிகையாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நிருபர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.*

*சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வு ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜீபிடர் ரவி, பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல்  தலைமையில் நடைபெற்றது.*

*இந்நிகழ்ச்சியில்,  ஒன்.எஸ்.நியூஸ்  தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஜெயசீலன், கலந்துகொண்டு, மறைந்த மூத்த பத்திரிகையாளர் காளிதாஸ், திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.*


*அதனை தொடர்ந்து  பத்திரிகையாளருக்கான  வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருடன் நெருங்கிப் பழகி வந்த மதி ஒலி ராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.*

*இந்த நிகழ்ச்சியில் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் நரியார்.கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மகளிரணி மாநில அமைப்புச் செயலாளர் கண்மணி,சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜான்சிராணி, மாநில இணைச் செயலாளர் ரிப்போர்ட்டர் விசின் அம்பலவாணன், தீப்பந்தம் இதழின் ஆசிரியரும் மாநில துணை செய்தி தொடர்பாளருமான ஜேம்ஸ்  மற்றும் தமிழக மக்கள் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர்.ராமச்சந்திரன், தமிழ்நாடு சிறு குறு பத்திரிகையாளர்கள் நலசங்க தலைவர் மனசொலி குரு,ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு ஊடகத்துறையினர் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன், தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் குமார், ஆல் இந்தியா பிரஸ் கிளப் தலைவர் ரஞ்சித் பிரபாகர், நான்காம் தூண் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் நாற்காலி கார்த்திக்,அகில இந்திய திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிஞர் சுமித்ரா, மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுரேஷ், தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அயன்புரம் பாபு, TUJ விவசாய அணி ஒருங்கிணைப்பாளர்ஜெயராமன், ரிப்போர்ட்டர் ஃபிளாஷ் பாலாஜி,உலக தமிழர் பேரவை தலைவர் அக்னி,தின உரிமை மக்கள் இயக்கத்தின் தலைவர் கல்பனா, நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மனித விடியல் மோகன், நடுவன் குரல் இதழின் ஆசிரியர் கார்த்திக் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் செல்வம்,வட சென்னை மாவட்ட தலைவர் கார்த்திக்,நமது கோட்டை இதழின் தலைமை நிருபர் செல்வகுமார், போலீஸ் பப்ளிக் பிரஸ் நிருபர்கள் மீடியா நிவாஸ் மற்றும் அருண்குமார்  கருணாஸ் Tv யோவான் (எ) ஜான் என  பல  பத்திரிகையாளர்கள்  நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*

*இந்த நிகழ்வின் தொகுப்புரையை மாநில  மகளிரணி  அமைப்புச் செயலாளர் கண்மணி சிறப்பான முறையில்  வழங்கினார்.அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளர் நரியார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  நன்றியுரை நிகழ்த்தி விழாவினை நிறைவு செய்தார்.*

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial