சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் அறக்கட்டளை இணைந்து செங்குன்றத்தில் 10 ரூபாய்க்கு சிக்கன் முட்டை பிரியாணி வழங்கினர்

Spread the love

.

பொதுமக்களுக்கு இலவசமாக உணவை வழங்காமல், அனைவரும் சுயமரியாதையோடு உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் அறக்கட்டளை இணைந்து வாரந்தோறும் 10 ரூபாய் சாப்பாடு 4வது வாரமாக சிக்கன் பிரியாணி முட்டையுடன் 10 ரூபாய்க்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா தலைமையில் செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.

செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் எம்.ஜி. ரமேஷ், சமூக சேவகர் முகம்மது இப்ராஹீம், புள்ளிலைன் லயன்ஸ் சங்க பொருளாளர் மந்திரமூர்த்தி ஆகியோர் இதனை துவக்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு பிரியாணியா என பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பிரியாணி வழங்கப்பட்ட 10 நிமிடத்தில் இருநூறு பிரியாணி பொட்டலங்களும் விற்று தீர்ந்து விட்டன.

வட்டாரத் தலைவரும் சென்னை சோசியல் லயன்ஸ் சங்க உடனடி தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க செயலாளரும் ஐ.ஜெ. பிராப்பர்ட்டீஸ் உரிமையாளருமான ஏ.கே.முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வட்டாரத் தலைவரும் பாடியநல்லூர் லயன்ஸ் சங்க உடனடி தலைவருமான கா.ஷண்முக சுந்தரம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க உறுப்பினர் சேர்க்கை இயக்குநர் கோகுல் எஸ்.வைத்தீஸ்வரன், சோசியல் லயன்ஸ் சங்க இணைச் செயலாளர் வேல்முருகன் (எ) விஜி, இணைச் செயலாளரும் ஐ.ஜெ. பிராப்பர்ட்டீஸ் உரிமையாளருமான நூர்ஷா, மார்க்கெட்டிங் கம்யூனிகேட்டர் எஸ்.ரமேஷ், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகி நாகராணி, முகம்மது பாசில், சூர்யா, கிளாட்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கப் பொருளாளர் பயாஸ் உசேன் நன்றி நவின்றார்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial