சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் சேவா சக்கரா குழந்தைகள் இல்லத்தில் மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம்

Spread the love

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் நண்பன் இதழ் இணைந்து ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுடன் மதநல்லிணக்க தீபாவளி பண்டிகையை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி பாரி நகரில் அமைந்துள்ள சேவா சக்கரா குழந்தைகள் இல்லத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் உடனடி தலைவரும் வட்டாரத் தலைவரும் ரெட்ஹில்ஸ் நண்பன் இதழின் ஆசிரியரும்-பதிப்பாளருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்றார்.

சேவா சக்கரா குழந்தைகள் இல்லத்தின் நிர்வாகி மகேஷ், கண்காணிப்பாளர் ஜெகன், தீபா, பூமி பவுண்டேஷன் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் முருகேசன், திருவள்ளூர் மாவட்ட அரசு தொழில் வணிகத்துறை ஐடி விங்க் தலைவர் செல்வராஜ், மஸ்ஜிதே ஆயிஷா தலைமை இமாம் மௌலவி முனைவர் ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சேவா சக்கரா குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள 65க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத்தின் உடனடி தலைவரும் வட்டாரத் தலைவருமான கா.ஷண்முக சுந்தரம், இணைச் செயலாளர் சிலம்பரசன், கமருன்நிஷா, முஹம்மத் பாசில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை இயக்குநர் கோகுல் எஸ்.வைத்தீஸ்வரன் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial