அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனையில் மதிய உணவு

Spread the love

அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் செங்குன்றம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் என

120க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி சமூக சேவகர் அருண் குமார் தலைமையில் நடைபெற்றது.

பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரி (ஓய்வு) இளவரசி,
வருவாய்த்துறை அதிகாரி
ஸ்டீபன், செங்குன்றம் அரசு மருத்துவர் ஜோஸ்பின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மதிய உணவை வழங்கி துவக்கி வைத்தனர்.

இதில் சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், சமூக சேவகர்கள் ஜி.கந்தசாமி, அன்பு, வழக்கறிஞர் திராவிட டில்லி, சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்கே. வரதராஜன், செயலாளர் நண்பன் அறக்கட்டளை எம்.அபூபக்கர், இணைச் செயலாளர் கா.ஷண்முக சுந்தரம், தகவல் தொழில் நுட்ப அதிகாரி கோபிநாத், பம்மதுகுளம் மகளிர் தலைவி தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial