சோழவரம் ஒன்றியத்தில் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது

Spread the love

சோழவரம் ஒன்றியத்தில் ஏழை எளிய மக்களுக்கு
விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின்படி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட அருமந்தை ஊராட்சியில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான சிறுணியம்
பி. பலராமன் கலந்துகொண்டு கோழிக்குஞ்சுகளை வழங்கினார்

இதனை தொடர்ந்து சீமாவரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா யோகேஷ் குமார் தலைமையில் மற்றும்
சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி. பலராமன் விலையில்லா கோழி குஞ்சுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் பின்னர் வருகின்ற கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கேக் வெட்டி சீமாவரத்தில் ஊராட்சி உள்ள கிராம மக்களுக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி. பலராமன் கலந்துகொண்டு விலையில்லாகோழிக்குஞ்சுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி. பலராமன் கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.இதில் கட்சி நிர்வாகிகள் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். ராஜேஷ்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகி பி.கே செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial