திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் மீஞ்சூர் ஒன்றியம் , ஆகிய பகுதிகளில் அதிமுகவின் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் P. பலராமன் தலைமையில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.P.B பரமசிவம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பாசறை படிவத்தையும் அவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் P. பலராமன் வழங்கினார்
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை இணைத்த இந்த நிகழ்ச்சி அதிமுகவினர் இடையே மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது
இதில்கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் S. ராகேஷ்திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத்மீஞ்சூர் ஒன்றிய  செயலாளர் மோகன வடிவேல் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial