ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

Spread the love

ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். செங்குன்றம் பேரூராட்சி சார்பில் ஆணையர் சங்கருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.இதில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் செங்குன்றம் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி செங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ், குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் செங்குன்றம் பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன், வார்டு கவுன்சிலர்கள் கே.ஆர்.ரமேஷ்,
வினோதினி பாலாஜி இலக்கியன்,
எம்.எம்.டி.இளங்கோவன்,மற்றும் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial