விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13 வயது உட்பட்ட சிறுவர்களுக்கான ஒரு நாள் மாபெரும் கால்பந்தாட்ட போட்டி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில்
சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13 வயது உட்பட்ட சிறுவர்களுக்கான ஒரு நாள் மாபெரும் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.இதில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்த போட்டியை துவக்கி வைத்தனர்.

இதில் திருவள்ளூர் மாவட்டம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்.இதில் முதலிடம் வெற்றி பெற்ற திருவேற்காடு அணிக்கு 6000 ரூபாய் காசோலையும் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் இரண்டாம் இடம் வெற்றி பெற்ற விளாங்காடு பாக்கம் ஊராட்சி அணிக்கு 4000 ரூபாய் காசோலையும் கோப்பையும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சேலஞ்சிங் புட்பால் அகாடமி பயிற்சியாளர் உதயநிதி மற்றும் அகாடமி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial