செங்குன்றம் அருகில் கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலை ஆண்டு விழா நடைபெற்றது

Spread the love


சென்னை செங்குன்றம் அடுத்த அன்னை இந்திரா நினைவு நகரில் உள்ள கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கலீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் மார்க்கம் குறித்து சிறப்புரையாற்றி அரபி பாடசாலையில் சிறந்த முறையில் பயின்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை சென்னை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா வழங்கினார்.


இதில் மாணவிகள் சொர்க்கம் நரகம் என்கிற தலைப்பில் இஸ்லாம் மார்க்கத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்து.


இதில் தலைமை இமாம் மௌலானா முகமது யூசுப், முகமது இப்ராஹிம் அன்வாரி, ஜனாப் செய்யது பாருக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இஸ்லாம் மத நல்லொழுக்கம் குறித்து பேசினர். இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial