திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புழல் ஒன்றிய துணைச் செயலாளர் இரா.முருகன், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் அற்புதராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புழல் ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் சாம்,வெங்கடேசன் அற்புதநாதன், ராகவன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மாதவரம் எஸ். சுதர்சனம் கலந்துகொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி,புடவை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பின்னர் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கினர்.

இதில் அவைத் தலைவர் வழக்கறிஞர் செல்வமணி,மாவட்ட பிரதிநிதி ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேஸ்வரி எத்திராஜ், நாரவாரி குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் ஒன்றிய துணை பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், பேரூராட்சி துணைத் தலைவர் விப்ர நாராயணன் வழக்கறிஞர்கள் கமலக்கண்ணன், முரளி, கபிலன் மற்றும் கவுன்சிலர் சிவக்குமார் வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி விஜி, ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெ.முருகன்,மா.மணி, ஏழுமலை, யுவராஜ் பிரகாஷ் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கழக அனைத்து நிலை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial