சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா

Spread the love

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி ஆலய மஹா மண்டபத்தில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வரிசைகள் வழங்கி ஆசீர்வதித்து மதிய உணவு வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக சோழவரம் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சு.ஷாலினி வரவேற்புரையாற்றினார்.

இதில் பூதூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயதீபா, சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஏ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், ப.சேகர், பொன்.கோதண்டன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial