புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Spread the love

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட. தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா புழல் ஒன்றியம் செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாங்காடுபாக்கம், புள்ளிலைன், சென்றம்பாக்கம், கிராண்ட்லைன், வடகரை, தீர்த்தம்கிரியம்பட்டு, அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வரிசைகள் வழங்கி ஆசீர்வதித்து மதிய உணவு வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக சோழவரம் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சு.ஷாலினி வரவேற்புரையாற்றினார்.

324 ஜெ லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பி.வி.ரவீந்திரன், முன்னாள் ஆளுநர் டி.துளசிங்கம், புழல் ஒன்றிய குழுப் பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கரன், புழல் ஊராட்சி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் கோ.தயாளன், செங்குன்றம் நகரச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன்,
புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.வேதநாயகம், எஸ்.மம்மு, நாரவாரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மதுமதி, லயன்ஸ் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் புள்ளிலைன் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ், வெள்ளச்சேரி பொ.மதுரைமுத்து, கொள்ளுமேடு ஏ.பிரபாகரன், செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.கோபி, செயலாளர் ஏ.லோகநாதன், பொருளாளர் கே.ஏ. குணசேகரன், செங்குன்றம் லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெ.ராஜ், செயலாளர் ஆர்.செல்வக்குமார், பொருளாளர் பி.நந்தகுமார், புள்ளிலைன் லயன்ஸ் சங்கத் தலைவர் என்.கணேசன், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் மந்திரமூர்த்தி, புழல் ஒன்றிய திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, துணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி எத்திராஜ், எம்.அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி எம்.ரமேஷ், செங்குன்றம் நகர அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், க.கபிலன், பொருளாளர் என்.சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, இ.திராவிடமணி, ஆர்.எம்.பி. குமார், என்.எம்.டி. இளங்கோவன், ஜெ.ஜெய்மாறன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வினோதினி பாலாஜி, கா.கு. இலக்கியன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial