பாஜக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றத்தில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது

Spread the love

பாஜக கட்சி சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை மாதவரம் அடுத்த செங்குன்றத்தில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். ஜி. எஸ்.ரஜினி, சரவணன், செல்லமுத்து, வடகரை ஜி.எஸ். அருண்குமார்(எ) அருண்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தை முன்னிட்டு முன்னதாக செங்குன்றம் மார்க்கெட் அருகில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செங்குன்றம் சமுதாயக்கூடத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவர் பத்மநாபன் ,ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன், பாஜக கட்சி நிர்வாகிகள் பலருடன் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial