நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சி ஆலோசனை கூட்டம் பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி துணைத் தலைவர் ஆர்.இ.ஆர்.விப்ர நாராயணன், செயல் அலுவலர் ம.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை, பேவர் பிளாக் சாலை, தமிழ்நாடு நகர்ப்புற சாலை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் திட்ட மானியத்துடன் பேரூராட்சியின் பங்குத் தொகையும் சேர்த்து பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து மற்றும் நிர்வாக அனுமதி வழங்க கோரி மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மன்ற அரங்கிற்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கூட்டரங்கம் என்று பெயர் வைக்க கோரிய பேரூராட்சியின் துணைத் தலைவர் ஆர்.இ.ஆர். விப்ர நாராயணன் கடிதத்தை மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் லதா கணேசன், என்.சகாதேவன், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், தெய்வானை கபிலன், லீலாவதி சாந்தகுமார், கே.ஆர்.ரமேஷ், வினோதினி பாலாஜி, அமுதா ஆசைத்தம்பி, கோமதி பாஸ்கர், ஸ்ரீதேவி தேவராஜ், கு.மோகன் (எ) கா.கு.இலக்கியன், என்.ராதாகிருஷ்ணன், என்எம்டி. இளங்கோவன், கே.கோதண்டராமன், தூய்மை ஆய்வாளர் மதியழகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial