அருமந்தை ஊராட்சியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைபொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்

Spread the love

அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் அருமந்தை ஊராட்சியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் அருமந்தை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உடனடியாக அருமந்தை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சரி செய்து கொடுப்பேன் என உறுதி அளித்தார்.

பின்னர் தேனீர் கடையில் மிகவும் எளிமையாக தேனீர் அருந்தினார். இதில் சோழவரம் ஒன்றிய தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன்,ஒன்றிய கவுன்சிலர் மொழியரசி மற்றும் பலர் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial