பாடியநல்லூர் அருள்மிகு திருலோக நாயகி சமேத திருநீற்றீஸ்வரர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நிகழ்ச்சி

Spread the love

. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு திருலோக நாயகி சமேத திருநீற்றீஸ்வரர் ஆலயத்தில் . திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நிகழ்ச்சி ஆலய நிர்வாக செயலாளர் சரவணன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆலயத் தலைவர் அண்ணாமலை பொருளாளர் மதனகோபால் ஆன்மீக சேவகர் எல்லப்பன் முன்னிலையில் பஞ்சமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வண்ண மலர்கள் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய குருக்கள் சங்கர் பஞ்ச முழக்கங்கள் முழங்கி தூப தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உபயதாரர்சமூக சேவகர்மான டி. குமரன் காஞ்சனா, ஆகாஷ் அர்ஜுன் குடும்பத்தினர் சார்பில் மேளதாள வாணவேடிக்கையுடன் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆலய நிர்வாகிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனை செய்தும் சாமி தரிசனம் செய்தும் இறை அருள் பெற்றுச் சென்றனர். முடிவில் ஆலய நிர்வாகம் சார்பில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial