டாக்டர். ஏபிஜே. அப்துல்கலாம் மக்கள் பொது நல அமைப்பின் சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நிகழ்ச்சி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய கூடத்தில்   டாக்டர். ஏபிஜே. அப்துல்கலாம் மக்கள் பொது நல அமைப்பின்  சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நிகழ்ச்சி  அமைப்பின் மாநில தலைவர் பாக்ஸர் துரை தினேஷ் தலைமையில்  நடை பெற்றத இதில் மாநில துணைத் தலைவர் எஸ். சமீம் அகமது நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அப்துல்காசிம் மாநில பொருலாளர் ஹரிக்கிஷோர்  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் ,சுதீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்வித்தியாசாகர், கௌரவ ஆலோசகர் ஜெயநிதி, தாடி செல்வம் , மற்றும் மாவட்ட செயலாளர் :அப்பு சீனி, மாவட்ட துணை செயலாளர் : டிக்காரம், புழல் ஒன்றிய செயலாளர்: அயன் செல்வம், ஆகியோர் முன்னிலையில்  சிறப்பு அழைப்பாளராக காவல்துறை புழல் சரக உதவி ஆணையாளர் ஆதிமூலம், மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி  ஆகியோர் கலந்துகொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர். பின்னர்  ரீலா மருத்துவமனையின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சர்க்கரைநோய், இசிஜி, கண், பல், காது,   மூட்டு உள்ளிட்ட புறநோய்கள்  சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை செய்து பின்னர் நோய்கள் தீர்வுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் அமைப்பின் சார்பில் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான  குறைந்த கட்டண அடையாள அட்டை மற்றும்  புடவைகள்  நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

இதில் செங்குன்றம்  காவல்துறை ஆய்வாளர் எம்.சி.ரமேஷ் , மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர்  மாரிமுத்து செங்குன்றம் பேரூராட்சி  ஆய்வாளர்  பாஸ்கர் பேரூராட்சி உதவி ஆய்வாளர்  மதியழகன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர். ஏபிஜே. அப்துல்கலாம் மக்கள் பொது நல அமைப்பின்  சார்பில் சார்பாக ரீலா மருத்துவமனைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial