சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் தேசிய ஊட்டச்சத்து மாத விழா சமுதாய வளைகாப்பு விழா

Spread the love

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் தேசிய ஊட்டச்சத்து மாத விழா சமுதாய வளைகாப்பு விழா திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவானது சோழவரம் குழந்தை வளர்ச்சி அலுவலர் மோகனா தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய துணைத் தலைவருமான மீ.வே. கருணாகரன் திமுக சோழவரம் ஒன்றிய நிர்வாகிகள் வீரம்மாள் ,துரைவேல் சுப்ரமணியம் ,திமுக மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி துரைவேல், சுகவேணி முருகன் , ருக்மணி ரவிச்சந்திரன், சந்திரா வாசுதேவன், மாலதி மகேந்திரன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial