சில்ட்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் பள்ளியில் செங்குன்றம் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

Spread the love

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள சில்ட்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செங்குன்றம் சரக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்பு உணர்வு நிகழ்ச்சி பள்ளி தாளாளர் என்.ராஜன் தலைமையில் நடைபெற்றது.


தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தா.ஜெயச்சந்திரன், முரளி, முத்துவீரப்பன் ஆகியோர் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர் மற்றும் ஆசிரியர்களிடம் செய்முறை விளக்கம் அளித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். மேலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடவும், பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்பு உணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கினர்.
இதில் வி.உதயக்குமார், ஜி.வினோத்குமார், பி.குமரவேல், எஸ்.அஹ்மத் சாயித், எம்.சரவணன், எஸ்.நவநீதகிருஷ்ணன், சுப்பையா, டி.தைரியநாதன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial