புள்ளிலைன் ஊராட்சியில் கிராமசபா கூட்டம்

Spread the love

புள்ளிலைன் ஊராட்சியில் கிராமசபா கூட்டம். திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி புதுநகர் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி வளர்ச்சி குறித்தும் ஊராட்சியில் உள்ள சுகாதாரத்தை குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக சமூக ஆர்வலர் ரமேஷ் தூய்மைப் பணியாளருக்கு இலவசமாக வாகனம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள் ராஜ்குமார், பாரதி, சாக்ரடீஸ், பிரேமலதா, தனலட்சுமி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இளைஞர்கள் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial