விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம்

Spread the love

தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று . அதன் ஒரு பகுதியாக விளாங்காடுபாக்கம் முதல்நிலை ஊராட்சியில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. விளாங்காடுபாக்கம் ஊராட்சி கழக செயலாளர் பெ.சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலாநிதி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். இதில் புழல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், புழல் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜன் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ந.ஆனந்தி நாகராஜன், ஏ.எல். மாரி, கே.சத்தியசீலன், எஸ்.அருணா தேவி சீனிவாசன், ஆர்.தர்மி ரவி, எஸ்.ரதி சீனிவாசன், எம்.நிலவழகி இனியன், என்.மாரியம்மாள் நரசிம்மன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன், உதவியாளர் ஜான்சிராணி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial