தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில்

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 11 நாட்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கிலோமீட்டர் மாபெரும் கண்டன சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் 56 தோழர்கள் பங்கேற்றனர் . இவர்களுக்கு பாராட்டும் வகையில் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி சைக்கிள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசனுக்கு . தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் காங்கை குமார் தலைமையில் மாலை அணிவித்து செங்கோல் ,கிரீடம் வீரவாள் கொடுத்து கௌரவித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராஜா , மற்றும் கட்சி நிர்வாகிகள் ,பச்சைபாஸ் பிரகாஷ் ,பிரபு கோடுவள்ளி விக்கி, காரணி மதன் கரலப்பாக்கம் மதன்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial