பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடி மாதம் அமாவாசை பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி ஆடி மாதம் அமாவாசை பூஜை முன்னிட்டு
சித்தர் அடியான்
ஜெ. பூபாலன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு
காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து
மூலவர் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்த படி
சமூக இடைவெளி கடைப்பிடித்து அவரவர் கோரிக்கையை ஏற்றார் போல் அகல் விளக்கேற்றி நேற்றி கடனை பூர்த்தி செய்தனர்

முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial