பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் 10 ஆம் ஆண்டு பௌர்ணமி மற்றும் குருபூஜை விழா

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வி. எம் .ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்ரி
ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று 10 ஆம் ஆண்டு பௌர்ணமி,
குரு பூஜை வெகு சிறப்பாக சித்தர்கள் அடியான்
ஜெ. பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது பின்னர் மூலவர் சிவபெருமானுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மூலமாக அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் அவரவர் கோரிக்கையை ஏற்றார் போல்
எலுமிச்சை கனியும்‌ ,விபூதியும் வழங்கப்பட்டது

முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவை அன்னதானமாக வழங்கப்பட்டது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial