காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வி.பர்ணபாஸ் ஏற்பாட்டில் 8000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Spread the love

கொரோனா அவல நிலை காரணமாக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே .எஸ் .அழகிரி, அறிவுறுத்தலின்படி
சென்னை கதிர்வேடு 25வது வட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அஞ்சு கிலோ, அரிசி, காய்கறி அடங்கிய தொகுப்பை 8000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார்,
சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர்
லயன் வி.பர்ணபாஸ் செய்திருந்தார்.

இதில்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜன் பர்ணபாஸ்,
காங்கிரஸ் கமிட்டி கட்சி நிர்வாகிகள்
சங்கீதா பாபு பிசிசி, சமூக சேவகர் பாபு, வட்டச் செயலாளர் சந்திரசேகர்,

மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் 25 வது வட்ட அவைத்தலைவர் தா .குமார் , வட்டச் செயலாளர் பி.சுரேஷ், வட்ட பொருளாளர் எஸ் ஆல்பர்ட் .எம் .டி .சி., துணைப் பொருளாளர்கள்
நாகராஜ் எம். டி .சி,. வழக்கறிஞர்
பி.சதீஷ்குமார், மாரி பரமசிவம், வட்ட பிரதிநிதிகள் எம் .அன்புநாதன், எஸ். சூசைமுத்து, மார்ட்டின், சீனிவாசன் மகேஸ்வரன், பகுதி வர்த்தக அமைப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial