செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி அருகே உள்ள பெட்ரோல் வங்கி எதிரில்,

Spread the love

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி அருகே உள்ள பெட்ரோல் வங்கி எதிரில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜெ.எம்.எச் அசன்ஆருண் ஆலோசனைப்படி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம்,  திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.சிவராஜ்பாபு  தலைமையில் மாநில 
பொது செயலாளர்  முகமது இப்ராகிம், மாநில செயலாளர்  பாஸ்கரன்,  வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் புழல் குபேந்திரன், ஆர்.டி.ஐ பிரிவு மாநில துணை தலைவர் அலிபுகாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்டத் துணைத்தலைவர் ரஜினி மாவட்ட துணை தலைவர் ராஜீவ் காந்தி,  பொதுச்செயலாளர் நாகராஜ் மாவட்ட பொதுச்செயலாளர் போட்டோ ஆனந்த், தொகுதி செயலாளர் யாகூப் ஷரீப், மாவட்ட பொது செயலாளர் மனோஜ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, ஐசக்  உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial