துப்புரவு பணியாளர் விடுமுறையால் களத்தில் இறங்கிய அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் சி.விக்ரமன் பொதுமக்கள் பாராட்டு—-

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை ஊராட்சியில் துப்புரவு பணியாளர் விடுப்பு எடுத்த காரணத்தால் குப்பைகள் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர் இந்த நிலையில் குப்பை வண்டி இழுக்கும் பணியாளர் விடுப்பு எடுத்த காரணத்தால் குப்பைகளை எடுத்துச் செல்ல முடியாமல் பெண் துப்புரவு பணியாளர்கள் அவதிப்பட்டனர்
அப்போது அவ்வழியாக சென்ற ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் துப்புரவு பணியாளர்கள் நிலையை அறிந்தார் இதை அடுத்து துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி குப்பை வண்டியை இழுத்துச் சென்றார்
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த தருணத்தில் துப்புரவு பணியாளர்கள் நடமாடும் தெய்வம். ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர் விடுப்பு எடுத்த மையால் அவர்களுக்கு உதவி செய்தேன் என்றார். மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் விக்ரமனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial