சென்னை மாதவரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ் .சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது

Spread the love

சென்னை மாதவரத்தில்
தட்டாங்குளம் சாலையில் அமைந்துள்ள ஜெயின் கட்டிட வளாகத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
நடைபெற்றது.

இதில்
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் பொதுமக்களிடம் கூறுகையில் இந்த கொரோனா நோய்தொற்று காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி
பொதுமக்கள் தானாகவே முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று மேலும் தேவையின்றி வெளியில் சுற்றக் கூடாது அவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும் அப்படிச் செல்லும்போது மாஸ்க் அணிவது மட்டுமின்றி
சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மேலும் கைகளை சானிடைசர்
மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறினார்

இந்த நிகழ்ச்சியில்
ஜெயின் வளாக நிர்வாகிகள் மற்றும் ஜெயின் வளாகத்தில்
வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial