மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் பாடியநல்லூர் ஊராட்சி கிருமி நாசினி தெளிப்பு

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியாக கிருமி நாசினி தெளிப்பு பணி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் கொரோனா
நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது இதனால் மக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடையே
எடுத்துரைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இந்த நிகழ்ச்சியில் சோழவரம் ஒன்றிய துணைத் தலைவரும் செயலாளருமான மீ.வே. கர்ணாகரன், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொரோனா
பரவல் தடுப்பு பணியாக கிருமிநாசினி டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் சாலை மற்றும் அனைத்து வார்டு வீதிகளில்
தெளிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி மோகன்ராஜ் நாகராஜ் ஞானம் தாமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகி தெரிவித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial