ஆன்லைனில் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்து ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்
ஒன்றியம்
அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் கிரி இவரது மகள் தர்ஷினி
சென்னை அரசு மகளிர் கல்லூரியில்
பிஎஸ்சி படித்து வந்த நிலையில் ஆன்லைன் பாடம் புரியவில்லை என தனது தாய் சரிதாவிடம் கூறி வந்த நிலையில்
கடந்த 19 ஆம் தேதி வீட்டில் கதவை உட்புறமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது குடும்பத்தினரை சந்தித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆறுதல் தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி சென்றார் அப்போது அவரிடம் பொதுமக்கள் முதியோர் உதவித்
தொகை வீட்டுமனைப்பட்டா சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி
தருவதாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உறுதி அளித்தார்..இதில் அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரம் மற்றும் துணைத் தலைவர் கண்ணன்,ஊராட்சி செயலர் தனசேகர்
மற்றும்
வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial