பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது

Spread the love

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்,இச்செயலுக்கு துணைபோகும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன்ரமேஷ் தலைமை தாங்கினார்.இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார் கலந்து கொண்டு பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.இதன் பின்னர், ஏர் கலப்பை பேரணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கல் சிவசங்கர்,ஒன்றிய கவுன்சிலர் திருமலைசிவசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் கே.கணேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில்,முன்னாள் எம்.எல்.ஏ அருள்அன்பரசு,மனித உரிமைதுறை மாநில இணைச் செயலாளர் காங்கைகுமார், எஸ்.கார்த்திக், எஸ்.பிரசாந்த், எஸ்.பிரவீன் மற்றும் மாநில,மாவட்ட,வட்டார,கிளை கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial