எம்ஜிஆர் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அருமந்தை வழுதிகைமேடு ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

Spread the love

எம்ஜிஆர் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அருமந்தை வழுதிகைமேடு ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருமந்தை, வழுதிகைமேடு ஆகிய ஊராட்சிகளில் பாரதரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளரும் சோழவரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவருமான பி.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பிரதிநிதி விச்சூர் இ.செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் செம்பியம் எம்.கே.சுப்பிரமணி, வழுதிகைமேடு எஸ்.இளங்கோவன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பி.கே.செல்வம், சோழவரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.கே.பாலன்,

சோழவரம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணைத் தலைவர் எம்.பரமசிவம், செயலாளர் டி.ஆலயசாமி, ஆத்திப்பேடு குணசேகரன், அருமந்தை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ்.மணி, டி.தமிழ்செல்வம், முன்னாள் அவைத் தலைவர் எஸ்.மெய்யழகன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜி.செந்தமிழன், வழுதிககைமேடு ரோஸ், ஆமூர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial