பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு திருலோகநாயகி சமேத திருநீற்றீவரர் ஆலயத்தில் கடந்த மாதம் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருநாள் நிகழ்வு

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு திருலோகநாயகி சமேத திருநீற்றீவரர் ஆலயத்தில் கடந்த மாதம் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருநாள் நிகழ்வு அன்று பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நிகழ்ச்சி ஆலய நிர்வாக செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆலயத் தலைவர் அண்ணாமலை மேஸ்திரி, பொருளாளர் மதனகோபால் ஆகியோர் முன்னிலையில் பஞ்சமூர்த்திகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக சேவகர் குமரன் காஞ்சனா ,ஆகாஷ் அர்ஜுன் குடும்பத்தினர் சார்பில் மேளதாளங்கள் மட்டும் வாணவேடிக்கைவுடன் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள் பக்தர்கள் உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர் .

முடிவில் ஆலயம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial