நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு விழா

Spread the love

செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதிநகரில் அமைந்துள்ள திப்பு சுல்தான் திடல் மஸ்ஜிதே தக்வா வளாகத்தில் நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு விழா மஸ்ஜிதுத் தக்வா தலைமை இமாமும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அலீம் அல்புகாரி தலைமையில் நடைபெற்றது.

மஸ்ஜிதுத் தக்வா தலைவர் சீனி முஹம்மத், ஏ.காசிம்பாய், ஜெ.தீன்முகம்மது, எம்.இஸ்மாயில், ஐ.சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக செங்குன்றத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்ரோட்டில் அமைந்துள்ள ஐசிஐசி பிரியாணி கடையை திறந்து வைத்தார்.

கிரசெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மௌலவி அப்துல் ஹை அந்நத்வி ஏற்புரையாற்றினார்.

உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் வழக்கறிஞர் புழல் பி.குபேந்திரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்பத்தூர் எஸ்.மகீந்திரன், அப்துல் சமது, செங்குன்றம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.கோபி, காங்கிரஸ் மற்றும் மஸ்ஜிதுத் தக்வா நிர்வாகிகள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial