செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த் மூவர்ஸ் உரிமையாளருமான பி. செல்வம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.

Spread the love

சென்னை செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த் மூவர்ஸ் உரிமையாளருமான பி. செல்வம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு

நாளை முன்னிட்டு ஏழை எளியமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எஸ். ஏ. எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பி.அன்பு தலைமையில் நடைபெற்றது. இதில் செங்குன்றம் நகரச் செயலாளர் ஜி. ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் ஜெ. ஜெய் மதன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் கலந்துகொண்டு மறைந்த எஸ். செல்வம் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, புடவை மற்றும் அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் அவைத்தலைவர் ஜெ. ரகுகுமார், துணைச் செயலாளர்கள் ஆர்‌. சீனிவாசன், டி.அருள் தேவநேசன், எஸ். முனீஸ்வரி குமார், ஒன்றிய பிரதிநிதி ஏ. கோபால், கே. சுந்தரம், கே. கபிலன் மற்றும் திமுக கழக அனைத்து அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மறைந்த பி.செல்வம் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial