சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பெருந்தலைவர் மீ.வே. கர்ணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி செய்து தருதல், தெருக்களில் உயர்தர மின் விளக்குகள் அமைத்தல், மினி பஸ் போக்குவரத்து வசதி அமைத்து தருதல்.உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வது குறித்து ஆலோசனைகளை கவுன்சிலர்களிடம் கூறி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial