உலக மக்கள் நன்மை வேண்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் ஆலய நிறுவனர் மு. முரளி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பால் தயிர் தேன் பன்னீர் சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கும்உற்சவர் அங்காள அம்மனுக்கும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் க.தினகரன், மு.மோகன் குமார், பி. விநாயகமூர்த்தி, சி.கோபி, கண்ணன், ஆனந்த்பாபு ,ஜெகன் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial