கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்குன்றம் சுற்றுவட்டார நாடார்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

செங்குன்றம் சுற்றுவட்டார நாடார்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள் விழாவை சங்கத் தலைவர் வி.சி. அகிலன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து 100 பேருக்கு இனிப்பு வழங்கி, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் மார்க்கெட் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. செயலாளர் ஏ.திருமால் முன்னிலை வகித்தார்.
இதில் துணைத்தலைவர் கேஎஸ்ஆர்.ஜெயராஜ், துணைச் செயலாளர்கள் டி.ரவீந்திரன், கே.சரவணக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.சரவணன், சர்வேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial