செங்குன்றம் அருகே அதிமுக கட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

செங்குன்றம் அருகே அதிமுக
கட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அம்பேத்கர் நகர், நாகத்தம்மன் நகரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் கடந்த கிறிஸ்துமஸ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று
ஏழை, எளிய குடும்பத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை
பிரிவு செயலாளர் டி. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி உடன் இனிப்புகள் வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியை ஒட்டி முன்னதாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கே. பார்த்திபன் ,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம். ஜி. ஆர் அணி செயலாளர் கே. ஆர். வெங்கடேசன் ,மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். எம் .ஜி. சீனிவாசன் ,மாவட்ட மகளிரணி செயலாளர் ஆதிலட்சுமி,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பிரபுதாஸ் ,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சோழவரம் ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்வம், பாலன், இயேசு ராஜன், கிருஷ்ணன்,மன்சூர் அலி, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial