கொரோனா ஊரடங்கு தளர்வால் மீண்டும் தொடங்கியது சிலம்பம் பயிற்சி!

Spread the love

திருவள்ளூர் அக் 10 செங்குன்றம் சி. பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூடம் சார்பில் சிலம்பம் பயிற்சி தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா ஊரடங்கால் பயிற்சி அளிக்க முடியவில்லை. தற்போது மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து பயிற்சி பெறுகின்றனர். கலைக் கூடத்தின் செயலாளரும். தேசிய சிலம்ப பயிற்சியாளருமான சிலம்பச்செம்மல் ஆர். முருககனி-தலைமையில் பயிற்சியாளர்கள். தமிழரசன். கமலக்கண்ணன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அனைவரும் கம்பு. தண்ணீர் பாட்டில். மாஸ்க் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி இல்லாத நிலையில் மன அழுத்தத்தை குறைக்கவும். ஆன் லைன் வகுப்புகளில் சோர்வு இன்றி பங்கேற்கவும் இந்த பயிற்சி உதவுகிறது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த பள்ளியில் படித்த மாணவி உமா மகேஸ்வரி தேசிய அளவில் தங்கம் வென்றவர் அவரும் பயிற்சியில் பங்கேற்று புதிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை யில் பயிற்சி அளித்து வருகின்றனர். 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial