புழல் ஒன்றிய திமுக சார்பில் காணொலி காட்சி வாயிலாக முப்பெரும் விழா

Spread the love

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். வழக்கறிஞர் அருண்மொழி விருது பெறும் கழக முன்னோடிகளை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.


திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி.சா.மு.நாசர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பாக தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுகவிற்கு உள்ளிட்ட கழக முன்னோடிகள் 500 பேருக்கு தலா ரூ. 10,000 பொற்கிழி, சான்றிதழ் வழங்கப்பட்டது. 
புழல் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன் தலைமையில் புழல் ஒன்றிய அவைத்தலைவரும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான வி.திருமால் முன்னிலையில் 
புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஒன்றியக் கவுன்சிலர் ப.சிவக்குமார், பி.கமலக்கண்ணன், ஊராட்சி செயலாளர்கள் ஜி.மேகநாதன், ஆர்.ஸ்டாலின், பெ.சரவணன், சி.சுதாகர், ஜி.தினேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புள்ளிலைன் தமிழ்ச் செல்வி ரமேஷ், விளாங்காடுபாக்கம் ச.பாரதி சரவணன், வடகரை என்.ஜானகிராம், மாவட்ட அணி நிர்வாகிகள் மாமணி, ஜெகன் தங்கராஜ், பாரதி, கா.கு.இலக்கியன், அணிகளின் அமைப்பாளர்கள் திராவிடடில்லி, ஆசிரியர் சிவானந்தம், செ.யுவராஜ், இளங்கோ, மனோதீபன், ஏ.டேவிட், கராத்தே பிரகாஷ், ராமச்சந்திரன், கார்த்திக், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புழல் ஒன்றியத்திற்குட்பட்ட கழக மூத்த முன்னோடிகள் 20 நபர்களுக்கு தலா ரூ. 10,000 பொற்கிழி, சான்று வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக புள்ளிலைன் தணிகை மஹாலில் நடைபெற்றது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial