புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல்
ஒன்றியம்
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில்
அமைந்துள்ள வண்ணான் குளம் சுற்றிலும் குளக்கரையின் ஓரம் பனை விதை நடவு நிகழ்வு எளைட் பள்ளிக் குழுமம் &
ஓஆர்ஜிஎன்
அரசு பள்ளி 95ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவர்கள் சார்பில்
கடந்த
ஞாயிற்றுக்கிழமை அன்று
காலை 7-00 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன் தலைமையில் பனை விதை நடவு நிகழ்வு நடைபெற்றது.
இதில் நிகழ்ச்சியில்
எலைட் பள்ளி குழுமத்தின் நிர்வாகி முனைவர் பால் செபாஸ்டின் மற்றும்
ஓஆர்ஜிஎன்
முன்னாள் மாணவர்கள் சார்பாக முரளி சிறப்பு உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில்
துணைத் தலைவர் செல்வி மதுரைமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர்கள்
ஆர் .செல்வமணி,
ஜி.திருநாவுக்கரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் என அனைவரும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் டில்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இன்றைய நிகழில் சுமார் 750 பனை விதைகள் நடப்பட்டன.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial