மனோபாலா பிறந்தநாளையொட்டி மனோபாலா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் உதவி வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது.

Spread the love

மனோபாலா பிறந்தநாளையொட்டி மனோபாலா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்
உதவி வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மனோபாலா பிறந்தநாளையொட்டி மனோபாலா அறக்கட்டளை சார்பில் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும்
ஏழை எளிய மக்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு பசுமை துப்புரவு தொழிலாளர்களுக்கு என 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் செங்குன்றத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு
நிழல் குடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் செங்குன்றத்தில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் குடிசையில் வசிக்கும் மக்களுக்கும் அன்றாடத் உபயோகப்படும் பாய் வழங்கும் நிகழ்ச்சி என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மனோபாலா அறக்கட்டளை நிறுவனர்
ஆர். முனுசாமி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி முன்னதாக செங்குன்றத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் எம்.ஆர் தாராசிங் , ஜி.கே. எழில் கே. பார்த்திபன் டி .ரமேஷ், ஆர். சூசைராஜ்,
ஆர். ஏ .சங்கரன் ,
வி. உமபதி, என். ராதா, ஆர். லக்ஷ்மி, ஜாகிர் உசேன், டீ. பவானிசங்கர்,
எம். ரஜினி கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial